நினைவு சுடர் நல்லூரில்

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப் படுகொலையை நினைவு கூறும்  நினைவுச்சுடர்  ஊர்திப் பவணி  இன்று (16) நல்லூரை வந்தடைந்தது. மாபெரும் மனிதப் படுகொலை நிகழ்ந்தேறிய முள்ளிவாய்க்கால் நினைவு நாளினை முன்னிட்டு தீப ஊர்திப்பயணம் இடம்பெற்று வருகிறது. வல்வெட்டித்துறையில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த ஊர்திப் பவணி  வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களூடாகவும் பயணித்து மே 18ஆம் திகதி  முள்ளிவாய்க்கால் மண்ணைச் சென்றடையவுள்ளது. இந்நிலையில் 2 ஆவது நாளான இன்று நினைவுச்சுடர்  ஊர்தி நல்லலூர் பகுதியை அடைந்துள்ளது.